ஒன்ராறியோ மாகாணம் - ரொரண்டோ, ஒட்டாவா மற்றும் பீல் பிராந்தியங்களில் கோவிட் 19 தொற்று நோயாளர் தொகை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் இந்தப் பிராந்தியத்தில் கட்டுப்பாடுகள் இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்படுகின்றன.
இந்த 3 பிராந்தியங்களிலும் உள்ள ஜிம்கள், திரையரங்குகள் மற்றும் உட்புற உணவகங்கள் அடுத்த 28 நாட்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் சனிக்கிழமை 12.01 மணி முதல் அமுலுக்கு வரும் என மாகாண அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பிராந்தியங்களில் தொற்று நோய் தீவிரமடைந்துவரும் நிலையில் அவற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் துணை செய்யும் என ரொரண்டோ முதன்மை பொது சுகாதார அதிகாரி டாக்டர் எலைன் டி வில்லா தெரிவித்தார்.
ரொரண்டோ பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை 350 புதிய கொரோனா தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். இத்துடன் ரொரண்டோவில். பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 21,919 ஆக உயர்ந்துள்ளது.
இந்த மாதத்தின் முதல் எட்டு நாட்களில் மட்டும் ரொராண்டோவில் கிட்டத்தட்ட 2,000 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக டாக்டர் டி வில்லா குறிப்பிட்டார்.
இதேவேளை, ரொரண்டோ, ஒட்டாவா மற்றும் பீல் பிராந்தியங்களில் இரண்டாம் நிலைக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுவது கடினமான முடிவு. வேதனையானது. எனினும் தற்போதைய நிலையில் இது அவசியமானது என அனைவரும் புரிந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்ப்பதாக மாகாண ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது கூறினார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா